பெருவெளியில் கடவுள்?

நமது பெருவெளியில் (பிரபஞ்சம்) கடவுள் இருக்க முடியாது! இது தான் ஸ்டீபென் ஹாகிங்க்ஸ் அவர்களின் The Grand டிசைன்  எனும் நூலில் தெரிவிக்கப்பட்ட கருத்து!
 இந்த பெருவெளியை உருவாக்குவதிலும், பேணுவதிலும் கடவுளின் தேவை ஒரு துளியும் இல்லை!
இது அறிவியலுக்கு ஏற்புடையதா? ஆம்! வேதாந்தத்துக்கு? ஆம்!
கீழே படியுங்கள்! 
உங்கள் கடவுள் உங்கள் மனதிலும் வாழ்வதற்கு வழி இல்லை!

நமது கோட்பாடான எல்லைக்கு அப்பாற்பட்ட எல்லைகள் அற்ற கடவுள் இல்லை என்பது தான் இப்போது நாம் பெற வேண்டிய தெளிவு! இந்த எல்லைகளுக்கு வெளி வாழும் கடவுள் வாழவே முடியாது! என்பது மிக உண்மை!

நாம் வாழும் இப்பெருவெளி எல்லைகள் அற்றது. ஒருவேளை இருந்தாலும் எல்லைக்கு அப்பால் என்ன என்பது உடனே எழும் கேள்வி! 
 
அது எதுவாக இருந்தாலும் அது இருக்க அங்கு ஒரு இடம் வேண்டும். அது வேறு ஒன்றும் அல்ல நமது பெருவெளியை எது தாங்குகிறதோ அதுவே அது! அதாவது நமது பெருவெளி எல்லைகள் அற்றது! எனவே கடவுள் இந்த பெருவெளியில் தான் இருந்தாக வேண்டும்!
 

இயற்பியலின்படி நமது பெருவெளியும் அதனுள் இருப்பதும் ஒரே பொருளால் ஆனது. இந்த ஒன்று தான் பெருவெடிப்பின்போது விரிவடைந்தது. அடர்த்தி வேறுபாடு காரணமாக சில பகுதி விரிவடையவில்லை. சில மிக பெரிதாக விரிந்தது. ஈர்ப்பு விசை காரணமாக அவை மேலும் விரிவடையாமல் அப்படி அப்படியே நிலைத்தன. எனவே, இந்த பெருவெளியில் உள்ளது எல்லாம் எதோ ஒன்றின் மாறுபட்ட வடிவ நிலைகளே! அதற்கு எந்த ஆற்றலும் இல்லை. ஒரு வேளை கடவுள் இருந்தால் இந்த மாறுபட்ட வடிவம் பெற்ற பொருளின் சிதைந்த ஒன்றாகத் தான் இருக்க இயலும். ஆகவே கடவுள் இந்த பெருவெளியில் இருக்க முடியாது. அதாவது அவர் இல்லை, இல்லவே இல்லை. 
 
 கடவுள் மனதிலேனும் வாழ முடியுமா? முடியாது! காரணம்-- மனித மனமும். பெருவெளியும் ஒன்றே! .. இது உபநிஷத்துக்களின் கூற்று.

 
ஒருவேளை கடவுள் ஒன்று இருந்தால் அது இந்தப் பெருவெளி தான்! யாரும் இந்தப் பெருவெளி இல்லை என்று சொல்ல முடியாது. இந்தப் பெருவெளியை எந்தக் கடவுளும் நடத்த வில்லை. இந்தப் பெருவெளியை , பெருவெளியே தன்னைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறது.( காரணம் கணிதக் கோட்பாடுகளும், வடிவமைப்பு விதிகளும் தான்.) அதாவது அதனால் இதைவிட வேறாக இருக்க முடியாது. கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டது இந்த பெருவெளி! 
இந்தப் பெருவெளியை நாம் கடவுளாகக் கொண்டால், நாம் இதிலிர்ருந்து மாற்றங்களையும், அழிபவகளையும் நீக்கி பேரு வெடிப்பு என்ற ஆரம்ப நிலையை எட்டுவோம்.  பெருவெடிப்புக்கு முன் இருந்தது வெற்று இடத்தில் இருந்த ஒரு பொருளே. அந்த பொருள் அதற்கு முன் இருந்த பெருவெளியின் சுருக்கமே!
வேதாந்தத்தின் கடவுளான பரமன் இந்தப் பெருவெளியே! விரிவுக்கும் சுருக்கத்துக்கும் மாறி மாறி சென்ற ஒன்றே.
  The Chandogya Upanishad says: All that exists in space come out of space, live in space, and dissolve in space in the end. What make them come out of, exist in, and go back to space? It is the mathematical or geometrical necessity of that space, which is called Prakriti or Karma. Physics is marching towards Vedanta.
எது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்ததோ அது ஒன்று இந்தப் பெருவெளியில் இருந்தே வெளிக்கிளம்பி அதிலேயே வாழ்ந்து, அதிலேயே முடிவுற்றது. இப்படி எல்லாம் இது தன் நிலை மாறக் காரணம்!???
 
வேறு  என்ன? நாம் படித்த வடிவியல் கோட்பாடு தான்! கணித விதிகள் தான்!!
மீண்டும் ஒரு முறை அறிய முயலுங்கள் "" நாம் வாழும் இந்த உலகு ஏன் உருண்டை வடிவம் உடையது"" 


ஏன் சதுரம், உருளை, செவ்வகம்>>>> இல்லை.