kaathalikka thodangivitten

காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!


அவளின் இதழ்களின் நடுவே தெரிந்த பற்களின்            
ஒளியில் கூசிய என் கண்களின் வழி புகுந்த அவளின் உருவம்
நிலைத்தது என் நெஞ்சுக்கூட்டில் (நினைவகத்தில்)  

உணர்வற்று நின்ற எந்தன் நிலை அறிந்த அவள் என்
அருகமர்ந்து என்னை சேர்த்தணைத்து உள்ளத்து அன்பெலாம்
ஒன்று  திரட்டி தந்தாள் ஒரு முத்தம் என் கன்னத்தில்!

அந்த முத்தத்தின் ஈரத்தில் என் உள்ளத்தில் பெற்ற புது உத்வேகத்தில்
அவளது இதழ் கவ்வி தேன் எடுத்தன எனது இதழ்கள்!
மலர்ந்த செந்தாமரை போன்ற அவளின் முகமலரின் பொலிந்த
அன்பினை எது கொண்டு நான் என்னுள் எடுத்துக் கொள்வேன்?

என் இதயத்தில் நிரம்பிய அன்பை முழுதும் அவளுக்கென்று சொல்லி
அவள்தரும் இனிய புன்சிரிப்பை விலையாகப் பெற்ற என் மனதில்
நிரம்பி வழியும் காதல் உணர்வை அவளின் மடியில் காணிக்கை ஆக்கி விட்டேன்!

என் கைகளில் சேர்ந்த அந்த மலர்ப் பூங்கொத்தின் நறுமணத்தை 
எப்படி முழுதும் அடைவேன் சிறிதும் மிச்சம் இல்லாமல்?
அவளின் சிறு நகைப்பில் இழந்தேனே என் வாழ்வின் வலி எல்லாம்!
அவளின் சிறு ஊடலில் தவித்தது என் மனம் ஆறாத்துயரில்!