மடையர்கள் ஜாக்கிரதை!

இந்த  பதிவு வலையில் வந்த பதிவுக்கு பதில் பதிவு! அங்க பின்னோட்டம் இட்டா நிச்சயம் வராதுன்னு தெரியும். 
அதனால இங்க!

நம்ப அறிவாளிங்க ஏன் நவகிரக கோயில் கட்டுனாங்கன்னு ஒரு விளக்க பதிவு பார்த்து இருப்பிங்க. அதுக்கு பதில் இங்க. மேலும் அந்த பதிவை இங்கு குறிப்பிடாமல் எழுத முயற்சிக்கிறேன்.  சில சொற்றொடர்கள் அங்க இருந்து பெறப்பட்டுள்ளது. 
இத எல்லாம் காபி ரைட் கேட்பார்களோ? சுடப் பட்டவை சிறிய எழுத்துகள். 




"தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும் இதே போன்ற பல நன்மைகள் கருதியே கட்டப்பட்டுள்ளன. கிரகங்களின் சுற்று வட்டப்பாதையில் அந்த இடங்கள் இவ்வாறான புவியியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையே இது காட்டுகிறது."


"ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டே நிரூபிக்க முடியாது. அது வாழ்ந்து பார்க்கும் போது காலத்தால் மட்டுமே நிரூபனம் ஆகும்."

அதாவது நாங்க எல்லாம் ஜோதிடம் என்கிற குப்பைய நம்பி செத்த பிறகு?

விவேகானந்தருக்கும்,  பாரதிக்கும் தெரியாத உண்மைய கண்டுபிடிச்ச மகானுக்கு ஒரு வணக்கம் போடுங்கப்பு!


"அவ்வளவு ஏன். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், மகாலய அமாவாசை அன்று இறந்து போன முன்னோர்களுக்கு தர்பனம் செய்வார்களே! அப்படி என்ன விஷேஷம் அந்த நாளில் என்று தோன்றும்.  வருடத்திலேயே சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாள் அது தான். இது புவியியல் ரீதியான உண்மை".

அடேங்கப்பா? என்ன அறிவியல் கண்டுபிடிப்பு. இந்த அறிவாளிகள் எல்லாம் ஏன் ஆரியபட்டர் சொன்ன  அறிவியலையும், மூட ஜோதிடத்தையும் குழப்பிக்கிறாங்க?

இது தான் இவங்க ரத்தத்திலேயே ஊரினதாச்சே!

"இன்னும் நிரூபனம் வேண்டும் என்றால், சமீபத்தில் சுனாமி வந்ததே. அப்போது அலைகளுக்கு பக்கத்திலேயே இருந்த திருச்செந்தூர் கோவிலில் சொட்டுத் தண்ணீர் கூடப் படவில்லை. ராமேஸ்வரத்தில் சுனாமி தாக்கவில்லை. இதை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கிவிட்டன. ஏனெனில் இது இந்து மதத்தைப்பற்றி இச்செய்தி உயர்வாக சொல்லிவிடுமே. அதுதான் காரணம். ஆனால் உலகையே உலுக்கிய சுனாமி ஏன் இந்த இரு  கோவில்களைத் தொடவில்லை. பதில் தெரிந்தால் கூறுங்கள்?"

அங்க செத்து போன மக்கள் யார பத்தியும் கடவுளுக்கு கவலை இல்ல. அவர் கோவில் மட்டும் அப்படியே இருந்து தன்னை நிரூபிச்சி இருக்கு.  என்ன தெய்வீகம்?
அங்க அவ்வளவு பெரிசா கட்டப்பட்ட திருவள்ளுவர் என்ற  சிலையும் அப்படியேதான் நின்னது!


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!


ஆமாம்! ரொம்ப சரி ! நாங்க அடிமையா இருக்கம்னே தெரியாம அடிமையா வாழ வைக்க தெரிந்த தர்மம் அல்லவா?

எப்பதான் மாறுவீங்க?

 சமஸ்க்ரிதம் உங்க மொழிதான். எங்களுக்கு இல்ல சாமியோ!

0 comments: