முட்டினால் கொம்பு முளைக்கும்?

ஒரு  தடவை  முட்டி, இன்னொரு தடவை முட்டாமல் விட்டால் கொம்பு முளைக்கும்!
இதை நம்பாதவர் கூட ஒரு வேளை நடந்து விட்டால்? என பயந்து இன்னொரு முறை முட்டிக் கொள்வது சிறு பிள்ளைத் தனம்? அல்லது குழந்தை மனம்?

நம் வாழ்வில் இது போல் எத்தனையோ செய்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும்! சில நிகழ்வுகள் நடக்கவே முடியாது என்று! இருந்தாலும் நாம் விடுவதில்லை. சிறு பிள்ளைகள் போல் நடந்து விடுமோ என்று பயந்து நாம் நம்பமுடியா ஒன்றையும் நம்ப ஆரம்பித்து விடுகிறோம்!

நம் உலகை திட்டம் போட்டு ஒரு அதி புத்தி உள்ள ஒரு """""""", படைத்து இருக்குமா? இதற்கு விடை தேடுவது சரியா? என நான் இங்கு வினவ வரவில்லை.

அந்த அதி """""""" நம்மை ஆட்டி வைக்கிறான்! அவனை கால் கை பிடித்து கீழ் விழுந்து அழுதால் மனம் இரங்கி நம்மை ஆட்கொள்வான்? இது ?

இந்த   """""""" தனக்கு வேண்டிய முகவர்கள் மூலம் அல்லது தம்மை உணர்ந்த அதி உன்னத ஆத்மாக்கள் மூலம் இந்த உலகில் வாழும் மனிதர்களை கடைத்தேற்றும் என நம்பி அவர்கள் காலில் விழும் நம் செயல்?

பிறப்பு முதல் நேரம் பார்த்து பார்த்து,,, ஒரு குறிப்பிட்ட அறிவார்ந்த? மனிதர் சொல்லும் எல்லாவற்றையும் நம்பி வாழும் நம் வாழ்வு  சிறு பிள்ளைத் தனம் ?

சாமியார், சாமியாடி, பூசாரி, ஜோதிடர், பகவான்கள், இப்படி எல்லா மனிதர்களின் கூட்டு முயற்சியால் தான் நாம் வாழ்கிறோம் இறை அருள் பெற்று என இருப்பது?

முட்டினால் கொம்பு முளைக்கும் என நினைத்து இன்னொரு தடவை முட்டிக் கொள்வது வேடிக்கை தான் பார்ப்பது! அதையே நாம் தினம் தினம் செய்வது? நொடிக்கொரு முறை நாம் செய்யும் எல்லா செயலையும் இதே பயத்துடன் செய்வது ?

பரிணாமத்தை எந்த மதமும் ஏற்றுக் கொள்வது இல்லை. அது போல் எந்த கடவுளையும் மண்ணில் உள்ள உயிர்கள் நம்புவதில்லை( முட்டினால் கொம்பு முளைக்கும் என்று எண்ணும் நம்மைத் தவிர)

அறிவியல் எப்போதும் ஆய்ந்து சொல்லும் உண்மையை! ஆனால் அறிவு கொண்ட நாம் மூட எண்ணம் பரப்பும் சில விந்தை மனிதரின் வார்த்தைகள் அழகாய் இருக்கின்றன! ஒரு மயக்கம் தருகின்றன என்பதால் மயங்கி சாய்கிறோம்! அதை பூரணமாக நம்பி வாழ்கிறோம்!

கதைகள் எப்போதும் சுவை கொண்டவை! அதற்காக? கதையில் வரும் எல்லாம் நம் வாழ்வில் அடையலாம் என்பது மடமை இல்லையா?

நமது புராணங்கள் எல்லாமே நன்றாக புனையப் பட்ட கதைகள் என்று தெரிந்தும்? நாம் மயங்குவது எதற்கு?

எல்லா மனிதரும் ஒன்றே போல் சிந்திப்பது இல்லை. ஆனால் நமது சிந்தனை உண்மையின் வழிப்பட்டதாய் இருக்க வேண்டும்! ஒன்றும் ஒன்றும் எப்போதும் ஒன்று தான்!.. இல்லை என்று சொல்பவன் நிச்சயம் எங்கோ எதிலோ தவறு செய்து தான் இருக்க முடியும்.  நம் பிள்ளைகளையாவது முட்டினால் கொம்பு முளைக்கும்! என்பது நிச்சயமான ஒரு அழகு கொஞ்சும் மூடத் தனம்! என சொல்லி வாழ வைப்போம்.

மனித உயிரின் விலை?




நம் சமூகத்தில் எல்லோரும் எதோ ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு தான் தம்மை சுற்றி உள்ள இந்த உலகை காண்கின்றனர்.
தாம் நினைப்பதே சரி! தம் எண்ணங்களே மேன்மையை நோக்கி செலுத்தும் கருவி என்றும் நினைகின்றோம்.
பிறரது கருத்தை எந்த வித சார்பு இல்லாமல் அணுகும் தன்மை நாம் இழந்து விட்டதன் அடையாளம் தான் நாம் பிறருடன் எந்த வித சிந்தனையும் செய்யாமல் உடனுக்கு உடன் விவாதம் செய்வது.  தம்மை முன்னிலை படுத்த முயலும் அறியாமை!

கீழே உள்ள குறும் படம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும் சென்று பாருங்கள். காவல் துறையில் பணி செய்யும் ஒரு அதிகாரி தான் முன்னரே கொண்ட ஒரு
கருத்தின் அடிப்படையில்  எதிராளியை எந்த வித இயல்பான காரணமும் இன்றி எதிராளியின் கூற்றின் உண்மைக் கருத்தை அறியாமல் அவர் செய்யும் செயலின் கேடு மிக எளிதில் விளங்கும் வண்ணம் காட்சி படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வேளை எதிராளி சொல்வது இவருக்கு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில்?
சூழலின் காரணமே மனிதனை ஒரு முடிவுக்கு வரவழைக்கிறது. அதன் சரி, தவறு பற்றி அவன் அக்கறை கொள்வது இல்லை.  திறந்த மனதுடன் ஒரு மனிதன் செயல்படும்போது தான் அவன் பணி அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சார்புடன் செய்யும் எந்த செயலும்?

தோட்டா  விலை என்ன?,