எலி ஏன் அம்மணமா ஓடுது?

josiyam?

மேலே இணைப்புக் கொடுத்தப் பதிவை சென்று பார்த்து வாருங்கள்!
என்னோட பதிவுக்கே எந்தப் பதிவரும் வரத்து இல்ல. இதுல நான் சொல்ற பதிவை பார்க்கவாப்  போறீங்க? இருந்தாலும் நான் சொல்கிறேன் .

ஜோசியர் சொல்றது உண்மையாப் பொய்யான்னு அலசி ஆராய்ந்து விட்டார் அந்த இடுகையில் .
உண்மை என்று வைத்துக் கொண்டு ஒரு விளக்கம்.
பொய் என வைத்து ஒரு விளக்கம்.
இறுதியில் வைத்தாரே ஒரு ஆப்பு. " ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள்! அவர்கள் உண்மை கசப்பாக இருந்தால் அதை மறைத்து உங்களை ஆற்றுபடுத்தும் நோக்குடன் சில செய்திகளை சொல்லி உங்களை நலம் பெற்று வாழ வைத்து உங்கள் எதிர்காலம் கணித்து தருவர்"?

ஜோதிடர்களை டாக்டர்களுடன் சரிசமமாக வைத்து வாதிடுகிறார் இங்கு.

அதாவது நீங்கள் வாழ்ந்த இத்தனை நாள் வாழ்க்கை , இனி நீங்கள் வாழப் போகும் வாழ்க்கை, அது மட்டும் இல்லாமல் உங்கள் ஆத்தா, அப்பன், வகையறா, கூடப் பொறந்த வகையறா, வாழப் போறவன், போரவ வகையறா நீங்க டாக்டர், engineer என  எல்லாவற்றையும் நீங்கள் பிறந்த அந்த நேரம் வைத்துக்  கணிக்கும் திறன் பெற்ற நல்ல(முழுமையான ) ஜோதிடர் இந்த உலகில் உள்ளார் என்று சொல்வது யார் காதில் சுற்றும் பூ?


அடுத்த இடுகையில் இதை விட மேலாக ஒன்று . அதை நான் இங்கு ஒட்டுகிறேன்.

"கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும்" என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம். எனத் தொடங்கி அரை குறை ஜோதிடர் பற்றி பேசி அவர்களும் நமது நன்மைக்கே என வாதிட்டு அமைகிறார்.


இதற்கு மேல் இன்னொரு இடுகை இட்டு இந்த தொடரை நிறைவு செய்வாராம்.
இதை எல்லாம் விட வேடிக்கை தனது வலைப் பக்கத்தில் கீழ்க்கண்ட தொடரும் வைத்து உள்ளார்.

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் முருகனை வழிபடுவோர்க்கே!



எலிக்கு யாரும் ஜோசியம் பார்ப்பார்களா?
நம் ஆட்கள் எதற்கும் ஜோசியம் பார்ப்பார்கள்.
நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவு பணம் என அவர்கள் கேட்பதை அனுப்பி ஒரு நேரம் குறித்துக் கொடுத்தால் போதும்.

பிறந்தது ஆணா, பெண்ணா என்பதையே நீங்கள் கொடுத்த நேரம் வைத்து சொல்லத் தெரியாதவர்கள் வேறு எது சொல்வார்கள் என்று பின்னால் போகிறீர்கள்?


ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு இடுகைகள் எழுதுவோரை விட்டு விடலாம். ஆனால் இது போல் எழுதி என்னைப் போல் அரைகுறை நம்பிக்கை உள்ளோரை முழு மூடராக்கும் மனிதர்களை பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை.

0 comments: