மனித உயிரின் விலை?




நம் சமூகத்தில் எல்லோரும் எதோ ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு தான் தம்மை சுற்றி உள்ள இந்த உலகை காண்கின்றனர்.
தாம் நினைப்பதே சரி! தம் எண்ணங்களே மேன்மையை நோக்கி செலுத்தும் கருவி என்றும் நினைகின்றோம்.
பிறரது கருத்தை எந்த வித சார்பு இல்லாமல் அணுகும் தன்மை நாம் இழந்து விட்டதன் அடையாளம் தான் நாம் பிறருடன் எந்த வித சிந்தனையும் செய்யாமல் உடனுக்கு உடன் விவாதம் செய்வது.  தம்மை முன்னிலை படுத்த முயலும் அறியாமை!

கீழே உள்ள குறும் படம் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும் சென்று பாருங்கள். காவல் துறையில் பணி செய்யும் ஒரு அதிகாரி தான் முன்னரே கொண்ட ஒரு
கருத்தின் அடிப்படையில்  எதிராளியை எந்த வித இயல்பான காரணமும் இன்றி எதிராளியின் கூற்றின் உண்மைக் கருத்தை அறியாமல் அவர் செய்யும் செயலின் கேடு மிக எளிதில் விளங்கும் வண்ணம் காட்சி படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வேளை எதிராளி சொல்வது இவருக்கு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில்?
சூழலின் காரணமே மனிதனை ஒரு முடிவுக்கு வரவழைக்கிறது. அதன் சரி, தவறு பற்றி அவன் அக்கறை கொள்வது இல்லை.  திறந்த மனதுடன் ஒரு மனிதன் செயல்படும்போது தான் அவன் பணி அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சார்புடன் செய்யும் எந்த செயலும்?

தோட்டா  விலை என்ன?, 

0 comments: