விளக்கு வச்ச நேரத்திலே




நம் கலைஞர் தொலைக்காட்சியின் புதிய மக்கள் தொடர். பார்த்தவர்களை அறிவு வெளியில் முன்னேற்றும் தொடர்.
நமது பரந்த அறிவை மேம்படுத்தும் தொடர்.

ஜோதிடம் என்ற நமது அறிவுக்கு எட்டாத ஒன்றை சொல்லி அதனை எல்லோரும் பார்க்க வலியுறுத்தி  வருவது.

நல்ல புகழ் பெற்ற ஜோதிடர் உங்களுக்கு என்ன எந்த நேரத்தில் நடக்கும் என்பதை நிச்சயம் சொல்வார் என முன் நிற்பது.

இதை எல்லாம் நம் மக்கள் எங்கே நம்பி விடாமல் போய் விடுவார்களோ என்ற சந்தேகம் தீரவும், நம்மை மேலும் அதனை நம்ப செய்யவும், நம் மனதில் எழும் கேள்விகளை இவர்களே  எழுப்பி நம் கேள்விகள் தவறு என்று மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.

"ஜோதிடம் தவறு" என்று சொல்வதாக இவர்களே காட்சி படுத்தி அப்படி சொன்னவர் ஜோதிடத்தை நம்பாததால் அடைந்த துன்பத்தை நமக்கு எடுத்து சொல்லி
நம் அறிவுக் கண்ணை திறந்து வைக்கின்றனர்.

இதில் வரும் முக்கிய காட்சியே " இளம்பெண் ஒருவர் ஜோதிடர் சொன்னது போல் பௌர்ணமிக்குள் பாம்பால் கடிபடுவதே."  ஆனால் காட்சிப்படி இந்த பெண் ஜோதிடம் நம்பாதவர். ஆனால் இவரைப் பாம்பு கடித்து விடுகிறது. இப்போது இவர் ஜோதிடம் நம்புகிறாரோ இல்லையோ நம் மக்கள் நிச்சயம் நம்பி விட்டனர்.

ஆபாசம் கூட நம் அறிவை அந்த நேரம் மட்டுமே மழுங்க செய்யும். ஆனால் இவர்கள் பரப்பும் இத்தகைய பொய்மைகள் நம் சமுதாயத்தை அடி பணிந்து வாழ செய்து நம்மை நாசம் செய்யும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் எதிர்காலத்தைக் கண்டுபிடித்து சொல்லும் இந்த ஜோதிடர்களை நாம்  நம்பி வாழமுடியுமா?

ஏன் இவர்களே தாம் சொல்வது சரி என்று காட்ட ஏதாவது தவறான செயல்களை செய்யக் கூடாது?

வாழ்வது ஒரு முறை! பயம் இல்லாமல் வாழப் பழகுவோம்!

0 comments: