சாதிகள் நம் அடையாளங்கள் !

இந்தியாவின் வட மாநிலங்களில் எல்லோரது பேரிலும் எதோ ஒன்று ஒட்டி இருக்கும்.
அது சாதிப் பெயராக இருக்கும் அவசியம் இல்லை. ஆனால் அதன் மூலம் அவரது சாதி அறிதல் எளிது. இந்த ஓட்டுப் பெயர் மூலமே பொது இடங்களில் அவர் அறியப் படுகிறார். ஆனால் மிக நெருக்கமானவர்களுக்கு அவர் பேர் அவர் அப்பா வைத்த பெயர் தான்.

பெரியார் போன்ற அரிய தலைவர்களின் முயற்சியால் நம் பெயரில் ஒட்டிய சாதிகள் நம்மை விட்டு விலகி ஓடின. பாரதி, வ.வு.சி இவர்கள் தங்களை தங்கள் சாதிப் பெயர்களிலேயே அழைத்து வந்துள்ளனர். அப்போதைய வழக்கம் அப்படி. அவர்கள் சாதிக்காக கொடி தூக்கினர் என்று சொல்ல முடியாது?  பெரியாரை நாயக்கர் என்று அளித்த சமூகம் நமது.

ஆனால் காமராஜ் , சிவாஜி , கருணாநிதி இவர்கள் பெயர்கள் பின்னால் சாதி சேர்த்து பாருங்கள். எவ்வளவு கீழாக இருக்கும் எனத் தெரியும்.  என் பெயரின் sur name  என் தந்தை பெயர், என் தாயின் பெயர், என் ஊரின் பெயர் இப்படி ஏதாவது இருந்தால் என்ன குற்றம்?
ஆனால் இதில் என் சாதியை நான் இப்போது சேர்த்தேன் என்றால் ?

இன்று நான் சந்திக்கும் பெரும்பாலான மக்கள் தாங்கள் இந்த சாதி என்று பெருமை கொள்வது இல்லை. ஒரு வேளை என்னுடன் இந்த சாதி ஒட்டி இருந்து இருந்தால் என்னை மற்றவர் நடத்தும் வகை ? நான் மற்றவரை நோக்கும் நிலை?

எதோ எங்கோ ஒரு மன மூலையில் பதுங்கி இருக்கும் இந்த சாதி பற்று நம்மை விட்டு நீங்க அதன் அடையாளங்களை நாம் நீக்க வேண்டும் நிச்சயமாக. பூநூல் அறுத்ததும் இதனைத் தொட்டே!

நம் தமிழ் மக்கள் தங்கள் பெயரில் நீக்கிய சாதியை சமூகத்தில் இருந்து நீக்கினால் எங்கு தம் தலைமையும், தனி தன்மையும் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவ்வபோது சில தலைகள் சாதிப் பெயரின் பெருமையை தலை தூக்கி விட முயல்கிறது.

சங்கங்கள் சார்பில் கட்சிகளை உருவாக்கி பிரிவு செய்யும் கயமை எண்ணம் கொண்டவரை நாம் விலக்குவோம்.

சாதி சங்கங்கள் இல்லாது ஒரு சமூகம் நம் பிள்ளைகள் காலத்திலேனும் உருவாக்குவோம். நம் சாதி அடையாளங்கள் நம் பிள்ளைகளை அடையாமல் காப்போம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
பிறப்பின் வழி வரும் இந்த அடையாளங்களை அறவே ஒழிப்போம்!

நீ இன்ன சாதி! என்பதை நீ! தான் நிச்சயம் செய்ய வேண்டும் உன் தந்தை அல்ல!

0 comments: