ஓடம் கரையினிலே!

வாழ்க்கை!

எங்கு போய் எப்போது நிற்கும் என அறிய
முடியாத ஒரு பயணம்! 

துவங்கியதும் சில -நேரம், எடுத்த அடி வைக்கும் முன்னே
சில நேரம்!

இந்த பயணத்தின் முடிவில் என்ன இருக்கிறது? 
எதை நோக்கியது இந்த பயணம்?

நோயில்,விபத்தில்,பொறாமையில், எனப் பல காரணங்கள் 
பயணம் -விடுபட!

பயணத்தை முடித்தவர் யார்? பயணம் இந்த திசை தான் என அறிந்து
பயணித்தவர் தான் யார்?

எங்கேனும் ஒரு வழிகாட்டி நமக்கு வழிகாட்டும், திசைகள் பல!

குறிக்கோள் ஏதேனும் உண்டா நம் பயணத்திற்கு?
மாறிய குறிக்கோள்கள் எத்தனை என்று கணக்கில் வைக்க முடியுமா?

வீழும் நிலையில் இருக்கும் பலரை விடுத்து வேகமாக நகர்ந்து விட்டோம்!
நாம் வீழும்போது நம்மை கை கொடுத்து காப்பவர் யார்?

தங்கும் மடம் நிறைய வழி நெடுகும்!
அவை நம் பயணத்தை தள்ளிப் போடவா? இளைப்பாறவா?
அல்லது அந்த மடங்கள் தான் நமது பயணத்தின் இலக்கா?


0 comments: