தமிழகத்தில் போட்டியிடக் கூடிய கட்சிகளில் குறைந்த பட்சம் ஜன நாயகத்தையாவது கடைப்பிடிப்பது எந்த கட்சி?.
மந்திரிகளே காலில் விழுந்தால் தான் தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்ள ஒரு கட்சிக்கு வோட்டு போடுவது எந்த ஒரு மனிதனுக்கும் சுயமரியாதை கேள்விகுறியாகக் கூடிய விஷயம்.
ஈழத் தமிழனுக்காக எந்த தேசிய கட்சியும் ஒன்றும் செய்து விடவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிராக சட்ட சபையிலும் பொதுவெளியிலும் எதிரானக் கட்சி எதுவென்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இவர்களை எல்லாம் மீறி தான் தன் பணியை செய்ய வேண்டிய கட்டாயம்.
சமூக நீதிக்காக போராடும் கட்சி நிச்சயம் யார் என்று நீங்களே சொல்லுங்கள்!
பொது வெளியில் சோதிடம் பார்த்து ஆட்களை தேர்வு செய்து அறிவிக்கும் கட்சி எது?
நம் வீட்டிலேயே சோதிடத்தை எதிர்த்து நாம் செயல்பட முயலும்போது ஒரு பெரிய கட்சி அதை நம்பியே செயல் படுவது எத்தனை ஆபத்து!
எங்கே போனது நமது பொது அறிவு?
பல கோடிகளை செலவு செய்து கட்டிய கட்டிடங்களை எதோ ஒரு காரணத்துக்காக பாழ்படுத்தியது சரியா?
ஏன் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பல எதிர்ப்பு ?
சாதியைக் கட்டிக்காக்கவும், மதத்தை காட்டி பயமுறுத்தவும் விளையும் கட்சிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் தோலுரித்தது யார்?
எந்த ஒரு மன சாட்சி உள்ள மனிதனும் அறிய வேண்டியது ஒன்று உண்டு!
எல்லா வகையிலும் சரியான ஒரு மனிதன் கற்பனையில் கூட இல்லை. அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் சரியான கட்சி யார்?
மனிதனை மனிதனாக சிந்திக்க வாய்ப்பளிக்கவும், தன் கருத்தை தயங்காமல் வெளியில் சொல்ல வாய்ப்பு தரும் கட்சி வேண்டாமா ?
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
0 comments:
Post a Comment