சென்னை சென்ட்ரல் நடை மேம்பாலம்

தேவை ஒரு நடை மேம்பாலம் !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பயன் செய்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ரயில் நிலையம் செல்ல நாம் பயன்படுத்த வேண்டிய சுரங்க நடைபாதையின் சிரமம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாம் இரண்டு பேருந்து நிறுத்தங்களை அடையலாம். மேலும் இரண்டு ரயில் நிலையங்களை அடையலாம். ஆனால் இவற்றை அடைய நாம் குறைந்தது 100 படிகளையவது ஏறி இறங்க வேண்டும்.  ஆம் !  அப்படி தான் உள்ளது தற்போதைய நிலைமை.





பயன்படுத்துகின்ற அனைவரும் உடல் வலு கொண்டவர் இல்லை. இதைப்பற்றி மாநில அரசோ ! ரயில்வே துறையோ எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. இந்த நிலையில் அங்கு நடப்பவர்களுக்கு ஏற்ற சாய்தளம் கொண்ட மேம்பாலம் அமைத்தல் மிகவும் இன்றி அமையாதது. நிலம் பற்றி எந்த வசதிகுறைவும் இல்லை.  இந்த பகுதி நிலம் பெரும்பாலும் ரயில்வே அல்லது மாநில அரசுக்கு சொந்தமானது ஆகும்.

மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் மாநில மத்திய அரசுகள் நிச்சயம் இந்த திட்டம் செயல்வடிவம் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இல்லாமல் எல்லா ரயில் நிலையங்களிலும் சாய்தளம் கொண்ட நடை பாலங்களை அமைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும்.


சென்னை சென்ட்ரல் , பார்க், பார்க் டவுன், அருகமைந்த பேருந்து நிலையங்களை நாள்தோறும் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களின் நலன் காக்க இந்த திட்டம் மிகவும் இன்றியமையாதது.

மக்களின் நலன் காக்க அரசு முன் வருமா?

0 comments: