விளக்கு வச்ச நேரம் --2

அன்பு வாசகர்கள் எதிர்பார்த்ததுபோல நம் விளக்கு வச்ச நேரத்.... கதை தலைவி , ஜோதிடர் கணித்தது போல் காத்திருந்த நல்ல பாம்புவினால் கடிபட்டார்.  இவர் கதைத்  தலைவி என்பதன் காரணமாக நம் வாசகர்கள் எண்ணியது போல் காப்பாற்றப் படுகிறார்.

நல்ல வேளை இவர் ஜோதிடத்தை நம்புவது போல் மிக அழுத்தமாக காட்ட வில்லை.
அம்மாவின் மூட நம்பிக்கையில் இருந்து தப்பிக்க இவர் படும் பாடு மிக அழகாக காட்டப் பட்டுள்ளது. மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட இவரது அம்மாவினைப் பார்த்தேனும் நம் மக்கள் இத்தகைய எண்ணங்கள் இல்லாமல் இருப்பார்களா?

பெண், பாம்பு கடிக்கவில்லை! என்று கூறியும் நம்பாத தாய் ! தன் மகளை மட்டும் கால் கழுவ சொல்லும் சுயநலம். இந்த காலத்திலும் சனி வந்து காலில் அமரும் என்ற மூடத்தனம்.

ஒரு நம்பிக்கை மட்டும் தானே என்று நம்பத் தொடங்கினால் காணும் எல்லா மூட எண்ணங்களும் நம்மை சூழும் என்பதற்கு நல்ல காட்டு இந்த அம்மா.

இதன் பின் நமது சிறப்பு ஜோதிடர் இந்த பெண்ணை பாம்பு கடித்து இருந்திருந்தால்  இந்த பெண் இரு தார மணம் செய்வது மட்டும் இன்றி ஒரே நேரத்தில் இருவரோடும் ஒரே வீட்டில் வாழ்வார் என்று கணித்துக் கூறும் திறன் வியக்கத்தக்கது.

இந்த பாடத்தை இவர் எங்கு கற்றாரோ?
இந்த வகையான செயல்திறன்மிக்க ஜோதிடர் இன்னும் நிறைய பேர் வேண்டும்!
நம் அரசு இரு தார மணம் சட்ட விரோதம் என சொல்லி இருப்பது இவருக்கு தெரியுமோ?

ராமாயணம் போன்ற பழங்கதைகள் இந்த நிகழ்வுகளை கொண்டு இருந்து அதைக் காட்டினால் நாம் இந்த அளவு அதைப் பற்றி சிந்திப்பது இல்லை. ஏனெனில் எல்லாம் பழங்கதை தானே! நம் பிள்ளைகள் கூட நம்பாது! ஆனால் நம் தாய்குலம் நம்பும்!

ஆனால் ஒரு சமூகக் கதையில் வீட்டில் வேளை கழிக்கும் பெண்களை தன் தொடர் பக்கம் இழுக்க இவர்கள் செய்யும் கீழ்மைக்கு என்ன முடிவு?

இவர்கள் தான் சிந்தனையாளர்களா?

2 comments:

hayyram said...

gud post.

regards
www.hayyram.blogspot.com

நாளும் நலமே விளையட்டும் said...

hi,
hayyram

thanks for the comment