பாரதியும் , பெரியாரும்

தமிழின் இருவதாம் நூற்றாண்டு அடையாளங்களில்
இவர்களைக் குறிப்பிடாமல் எதுவும் யாராலும் செய்ய முடியாது.

மனித நேயத்தில் இவர்களின் சிந்தனை மிக விரிவுபட்டது!
தனி மனித சிந்தனையில் இவர்களின் கோட்பாடு மாற்றம் இல்லாதது!
எல்லோரும் ஒரு நிறை! இது தான் இவர்களின் சித்தாந்தம்!

இருவரும் வேதத்தை ஒதுக்கி மனித அறிவுக்கே உயர்வளித்தனர்!
ஜோதிடத்தையும் , ஜாதியையும், குறுகிய எண்ணங்களையும் சாடியவர்கள்!

எல்லா மனிதனும் தன்மானத்துடன் வாழ பாடுபட்டவர்கள்!
தம் கால சமூக சீர்கேடுகளை  அழிப்பதில்   முன் நின்றவர்கள்!

பெண்ணிய சிந்தனையின் ஆதியும் இவர்களே!

மூட பழக்கங்களின் வேராகிய பிராமண சாத்திரங்களை சாடியவர்கள்!

இவர்கள் இருவரையும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே கண்மூடி தனமாக இறுதிவரை எதிர்த்தனர்.

தமிழைப் போற்றியவர் பாரதி. தமிழ் எழுத்து சீர்த்திருத்தியவர் பெரியார்!

கல்வி எல்லா மக்களையும் சென்று அடையவேண்டும் என்று விரும்பினர்.

இன்றைய தலைமுறைக்கு இவர்கள் இருவர் பற்றியும் சரியான வகையில் சொல்லாமல்
விட்டுவிட்டோம் நாம்.

பாரதி,பெரியார் வழி வந்த நாம் இன்னமும் நம் மூட எண்ணங்களை விட்டு விலகவில்லை,.
 ஜாதி மோதல்களில் நம் காலத்தை வீணடித்து வருகிறோம்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஜோதிட சாத்திரங்களில் மனம் செலுத்தி நம் வாழ்வையே முட்டாள்தனமாக வீண் செய்கிறோம். ஜோதிடம் பார்பவர் நமது வழிகாட்டியாகி நம்மை சீரழிக்கிறார்.

ஜோதிடம் பார்ப்பதும், அதை மேலும் மக்கள் அறியாமையில் செல்ல பயன்படுத்துவதிலும் நம்மைப் போன்ற படித்த அறிவாளிகளே தங்களை
மேதைகள் என்று கூறிக் கொண்டு பெருமைப் படுகிறோம்.

அறிவியல் சாதனங்களை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் நம் மூட நம்பிக்கைகளை மேலும் பரப்ப பயன் படுத்தி வருகிறோம்.

நாம் மேன்மை பெற்று வாழ வேண்டாம். குறைந்த பட்சம் அறிவுள்ளவர்களாக வாழ்வோம். மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்போம். பெண்களை நம் நிகராக மதிப்போம்.

0 comments: