சிக்கனம் தேவையா?

நாம்  வாழும்  இந்த பூமியில் உள்ள எல்லோரும் ஒரே மாதிரி வசதிகளுடனும் தேவைகளுடுனும் வாழ்வதில்லை.

நமக்கு எது விருப்பமோ அது பிறருக்கு வேண்டாததாக இருக்கிறது.

ஆனால் நம் எல்லோருக்கும் தேவையான காற்று, நிலம், நீர் இந்த மூன்றினையும் நமது வருங்காலத்துக்கும் விட்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு.

ஆனால் என்ன நடக்கிறது இங்கு?

எவன் கையில் இவை முதலில் கிடைக்கிறதோ அவன் இவற்றை நாசம் செய்வதில் முதன்மை பெறுகிறான்.

ஐந்து நக்ஷத்திர ஓட்டல்களில் மிக தரமான தண்ணீர், காற்று, நிலம் எல்லாம் பணம் படைத்தவனுக்கு கிடைக்கிறது.

ஆனால் இந்த ஒன்றும் இல்லாத பன்னாடை இருக்க இடம் இல்லாமல் குடிக்க நீர் இல்லாமல் தவிக்கிறான்.

இவன் சிக்கனம் செய்து என்ன செய்து விட முடியும்?
இவனிடம் கிடைப்பதே கொஞ்சமோ கொஞ்சம். அதில் இவன் எதை சிக்கனம் செய்வான்?

பணம் படைத்தவன் மட்டுமே நாம் வாழும் இந்த உலகின் எதிர்காலத்தை நிச்சயம் செய்கிறான்.(இங்கு பணக்கார நாடு உட்பட)

இவர்களிடம் சிக்கனம் செய்ய சொல்லுங்கள். அதனால் நிச்சயம் பயன் உண்டு.

ஆனால் இவர்கள் கேட்பார்களா?

தங்கள் உரிமைப் பொருட்களை என்ன செய்யவும் தெரியும் இவர்களுக்கு, பயன்படுத்தாமல் குப்பையில் போடும் வள்ளல்கள் இவர்கள்.

செய்தி!
1.2 litre  தண்ணீரில் குளித்ததாக (தண்ணீர் சிக்கனம் வலியுறுத்தி ) ஒருவர் சொல்கிறார்.

இதனால் பயன் என்ன? ஐந்து நக்ச்சதிர முதலாளிகள் சிக்கனம் செய்து விடுவார்களா?

மக்களே! ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சிக்கனம் உள்ளிட்ட எல்லா உபதேசங்களும் ஒன்றும் இல்லாத பன்னாடைகளுக்கு! நமக்கல்ல!.

0 comments: