சாமியாரின் சேவை !

மக்களின் நலனில் அக்கறை கொண்ட சாமி ஒருவர்(ஒருத்தன்), பன்னாட்டு விமான நிறுவனத்தை சேர்ந்த சிலருடன் சேர்ந்து நம் ஐந்து நட்சத்திர வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து உள்ளார்.  இவர் செய்த சேவையின் மதிப்பு பல மில்லியன் பவுண்ட்  ஆக இருக்கலாம்.  ஒரு சாமியார் தனது வியாபார திறன் மூலம் எத்தனை சேவை செய்துள்ளார் என்பதை நினைத்தால் பெருமை கொள்கிறோம்.

இவர் பெயர் ஷிவ் மீரா த்விவேதி . டெல்லியில் உள்ள ஒரு கோவிலை இதற்கான வரவேற்பு நிலையமாக பயன்படுத்தி உள்ளார்.  ஏறத்தாழ 200 பெண்கள். அவர்களில் விமானப் பணிப்பெண்கள், மாணவிகள் அடங்குவர்.  லட்சம் பேர் இவரது ஆன்மீக வழியை பின்பற்றுவதாக சொல்லப் படுகிறது.

இவரைப் போல சாமியார் சேவை இன்னமும் எங்கெங்கு நடைபெறுகிறதோ?
இவர்கள் தங்களை காத்துக் கொள்ள நமது நம்பிக்கை காரணமாய் இருப்பது வேடிக்கை !
மக்களே காவி கட்டியவனை எல்லாம் நம்புவதால் வரும் வினைகள்?

இவன் ஒரு நாளேனும் பொய்யாகவேனும் ஈசனை கும்பிட்டு இருக்க மாட்டானா?
ஐந்தறிவு ஜீவனுக்கெல்லாம் முக்தி கொடுத்து ஆட்கொண்ட ஈசன் இவனுக்கு புத்தி ஏதும் தரவில்லையா?
அல்லது இவனுக்கேனும் தெரியுமோ? ஈசன் இதை எல்லாம் வந்து கேட்க மாட்டார் என!

0 comments: