N.S. கிருஷ்ணன்

கலைஞர் தொலைக்காட்சியில் திரு. N.S. கிருஷ்ணன்  அவர்களது வாழ்க்கை சம்பவங்கள் காட்டப் பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும்.


நிகழ்ச்சியில் காட்டப்படும் படத்தொகுப்பில்  ஒரு படக்காட்சியில் முதல் தேதி படம்(1955) கீழ்க்கண்ட உரையாடல் இடம் பெறுகிறது:

இடம்: சமையல் அறை:
காட்சி: பணியாள் புகைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் அங்கு n.s.k  வருகிறார். கண்டதும் பணியாள் புகைப்பதை மறைக்கிறார். வாயில் இருக்கும் புகை அப்படியே வெளிவராமல் தங்கி விடுகிறது.

N.S.K: ரொம்ப  நாளா வீட்டில் சீனி தீர்ந்துபோரதுக்கு நீ தான் காரணமா?
பணியாள்: இல்லீங்க!
பேசும்போது புகை எட்டிப் பார்க்கிறது 

N.S.K  வாயில இருந்து புகை வருது?
பணியாள்: பனிக்காலம். அதுதான் பேசும்போது வருது
N.S.K வெயில் காலம்னா சாம்பல் வருமா?
பணியாள்: !!
பணியாள் கையில் இருந்த சிகரெட் பார்த்து விடுகிறார்.
N.S.K  என்ன இது சிகரெட் பிடிக்கிரியா? பிடிச்சா என்ன ஆகும் தெரியுமா? வாய் நாறும்! ஈரலக் கெடுக்கும். எழும்ப உருக்கும்! ஆயுளைக் குறைக்கும்! குடிக்கலாமா?

அடி  கிடைக்கிறது!. தன் கையில் இருந்த சிகரெட் எடுத்துப் புகைக்கத் தொடங்குகிறார். பார்த்த
பணியாள் என்னங்க? என்னைக் குடிக்க வேணாம்னு சொல்லிட்டு நீங்க?

N.S.K  ஏன்டா? சொல்றவன் அப்படியே நடப்பான்னு  நினைக்கிறியா? மடையா! நான் மற்றவர்களுக்கு புத்தி சொல்ற வர்க்கம் சேர்ந்தவண்டா!


காட்சி மறைகிறது!

KAATCHI ( இங்கு சென்று இந்தக் காட்சி காணுங்கள் )

எத்தனையோ பாடம் சொல்லும் இந்தக் காட்சி!

0 comments: