முக்காலமும் அறிந்தவர்!

எங்கள்  ஊரில்  ஒரு பெரியவர் இருந்தார். அவர் நல்ல ஒரு நாட்டு வைத்தியர் என்று சொல்லத்தக்க வகையில் எல்லோருக்கும் பச்சிலை கொடுத்தும் வீட்டில் உள்ள மற்ற பொருட்கள் மூலமும் பல நோய்களை தீர்த்து வைத்தவர்.

மாலை நேரங்களில் நல்ல கதைகள் சொல்வார். அவர் தான் எங்களுக்கு விக்ரமாதித்தன் கதை சொன்னவர். பட்டம் செய்ய கற்று கொடுத்தவர். மேலும் நீச்சல் கற்று தந்தார்.
சிறு பிள்ளைகளுக்கு நல்ல பல விளையாட்டு சொல்லி தருவார்.

இவர் பல வகையில் முக்காலமும் அறிந்தவர் . ஏனென்றால் எங்கள் ஊரில் எப்போது நிறைய மழை வரும் என்று முன்கூடியே சொல்வார். சுனாமி வரும் முன்னரும் எங்களுக்கு முன்னாடியே சொல்லி விட்டார். நாங்கள் தான் நம்ப வில்லை. 2100 வரும் முன்னர் இந்த உலகில் ஏற்படும் பல மாற்றங்களை பற்றி சொன்னவர்.

ஏன் இந்த முக்காலமும் அறிந்த மகான் எங்களுக்கு மந்திரம் சொல்லி தரவில்லை?
ஒரு வேளை அவருக்கு மட்டுமே அவை பலன் தருமோ?

இவர் எங்கள் ஊரில் உள்ள மற்றவருக்கு இந்த இந்த மருந்து இந்த நோயை குணப்படுத்தும் என்று சொல்லி விளக்கமாக பாடம் எடுப்பார். ஆனால் ஒரு முறையும் நாளை நடப்பதை எப்படி அறிவது என்று மட்டும் சொல்லி தரவில்லை.

ப்லாக் எழுதும் படித்த மனிதர்கள் சில பேர் இந்த பாம்பாட்டி சித்தர், மற்றும் பல சித்தர்கள் பற்றி கதை கதையாக  சொல்வதை இவர் எங்களுக்கு பல முறை சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் முக்காலம் அறிந்தவர்கள் என்று ஒரு போதும் சொன்னதில்லை.

அருணாசல மலை சுற்றினால் நல்ல உடல் வலுவும், உற்சாகமும் வரும் என்று தான் சொன்னார். இந்த சிவன் எங்களை காப்பான் என்று எப்போதும் சொன்னதில்லை இந்த முக்காலமும் அறிந்தவர்.

தான் நம்புவதை பிறர்க்கு சொல்வதில் இவருக்கு என்ன சிக்கல்?
இப்படி இருக்குமோ?

யாரோ சிலர் சொன்ன கட்டு கதையை சும்மா கதைக்காக மட்டுமே எங்களிடம் சொல்லி எப்போதும் உண்மையான விசயங்களை  மட்டுமே எங்களுக்கு  கற்றுக் கொடுத்தாரோ ?

அப்படினா சுனாமி வரும்னு இவர் சொன்னது கப்சாவா?

எது எப்படியோ! அய்யா புண்ணியவான்களே நீங்கள் நம்பும் முட்டாள் தனத்தை நீங்கள் நிரூபிக்க முடியுமானால் மட்டும் வலையில் இடுங்கள். இல்லாட்ட இந்த பெரியவர் மாதிரி உருப்பிடியா வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க. இல்லனா மூடிக்கிட்டு போங்க.

1 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

என்னங்க ஞானப்பித்தன் :http://www.blogger.com/profile/08758749129783786752 ! நீங்கல்லாம் பெரியவங்க!

ஏதாவது சொன்னா தானே இன்னும் நல்ல எழுத முடியும்.

நட்புடன்