தீபாவளி நாம் கொண்டாடலாமா?

நாம் தீவாளி கொண்டாடுவது சரியா?
நான் பணி செய்யும் இடத்தில் பல காலமாக என்னை சுற்றி வட இந்தியர்களே வாழ்கின்றனர். இவர்களுடன் நான் பழகுகிறேன். நட்பும் பாராட்டுகிறேன்.
இவர்களின் நட்பு வட்டத்துக்குள் நான் இருக்கின்றேன். இந்திய திருவிழா காலங்களில்
இவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து இருக்கின்றேன்.

இவர்களுடன் இந்திய அரசு செய்யும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களை சுட்டிக் காட்டுகிறேன். இதில் எங்களுக்குள் முரண்பாடு உண்டு. எனக்கு இந்தி தெரியாததை அவர்கள் எப்படி எடுத்து கொண்டாலும் என்னால் அவர்களுடன் இயல்பாக பழக முடிகிறது.

ஆனால் தீபாவளி போன்ற பண்டிகைகளை என் உளமார என்னால் கொண்டாடமுடிய வில்லை. என் முன்னோரை அழித்ததற்காக கொண்டாடும் விழாவாக என்னால் எப்படி ஏற்று கொள்ளமுடியும்?

தீபாவளி என்ற " இருளகற்றி ஒளி ஏற்றும்" நிகழ்வாக என்னால் இந்த விழாவை கொண்டாடமுடியும்.

எத்துணை பேர் இந்த மாதிரியான நாட்களில் தாங்கள் இத்தனை நாட்களில் கொண்ட தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ள முனைகிறோம்?

நாம் வாழ்வது நிச்சயம் சில காலம். இந்த நாட்களில் நம்மை சுற்றி இருப்போருடன் இயல்பாக பழகுவதில் நாம் வெற்றி அடையலாம்.

இன்று என் நண்பன் ஒருவனுடன் பேசினேன். அவன் இதைபோல் பண்டிகைகள் நிச்சயம் ஏற்புடையதல்ல என்கிறான். அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் என்ன செய்வது?

என் மனம் முழுதும் நாம் வாழும் இந்த உலகில் வாழும் எளிய மக்களின் துன்பம் நீக்கும் முயற்சி எதுவும் என்னால் செய்ய இயலவில்லையே என்பது தான்.

என் உளத்தில் மாறாமல் எந்த நிலையிலும் இது உறுத்திக் கொண்டே இருக்கும்.

0 comments: