உளறல்கள்!

முதுமை

சாய்வு நாற்காலியில் தெரிந்தது ஊஞ்சலின் சுகம்!
பேரன் அழுகையில் தெரிந்தது பிள்ளையின் வலி!
பேத்தியின் கொஞ்சலில் தேனின் சுவை !
கைத்தடியில் புரிந்தது கால்களின் தேவை!
மருமகளின் கோபத்தில் தெரிந்தது மனைவியின் பொறுமை!
கண்ணாடியில்  தெரிந்தது காலத்தின் கோலம்!
மாலையில் புரிந்தது காலையின் புதுமை!


வெண்மை
இறை நேசர் : இறைவனின் உள்ளம்
சகுனம் பார்ப்பவன்: அமங்கலம்
பெண்: விதவையின் துயர்
அரசியல்வாதி: சட்டை
அறிவியலாளன் : நிறங்களின் ஒருமை
பண்பாளன்: சத்தியத்தின் ஒளி

0 comments: