இவர்களுக்கு பதில் எழுதியே என் காலம் போய்டுமோ?

சமீபத்தில் ஒரு பதிவு இட்டேன். புதன் என்னைக் காப்பான் என்று?
இந்த பதிவு எதற்கு?
ஜோதிடம் பகுதியில் சிலர் தங்கள் சொந்த அனுபவங்கள் என்று இட்டுகட்டும் கதைகளை கேலி செய்யும் ஒரே நோக்கம்!

ஆனால் அவர்கள் மாறுவார்களா?
இன்று மேலும் ஒரு பதிவு. செவ்வாய் தோசத்தால் பிரிந்த காதலர்கள் !
அய்யா சாமிகளா! உங்கள் பதிவுகளுக்கு பதில் எழுதியே என் காலம் போய்டுமோ?
எப்படி உங்களால் வெட்கம் இல்லாமல் தவறான செய்திகளை அன்னை தமிழ் மொழியில் வெளியிட முடிகிறது?

விபசாரம் செய்பவனை மன்னிக்கலாம்.(அது உடலோடு மட்டுமே)
தன் உள்ளம் அறிந்து கயமையுடன் தவறான சிந்தனைகளை பரப்பும் மனிதர்களை நாம் என்ன செய்வது?

தயவு செய்து இனிமே காதலிக்கிறவங்க ஜாதகம் பார்த்து காதலிங்க ராசா!

0 comments: