வலிக்கிறது நெஞ்சம்!

நாங்களும்  வெடிப்போம் பட்டாசு
இந்த தீபாவளி மட்டும் அல்ல!
வரும் எல்லா தீபாவளிகளும்!
தமிழனுக்கு பிள்ளையாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக,
எப்போதோ யாரோ செய்த தவறுக்காக இப்போதும்,
துன்பத்தையே வாழ்க்கையாக கொண்டு வாழும் என்
மக்கள் பற்றி எமக்கு எந்த அக்கறையும் இல்லை!

எம் தொடக்கம் மறந்த மனிதர் நாங்கள்!
எம்மை நாய்கள் என்றும் வீணர் என்றும் பிறர் சொல்லும் போதும்
அவர் கால்பிடித்து வாழும் மனிதர் நாங்கள்.
தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே எங்களை நேசிக்கும் தேசிய கட்சிகள்!

எப்போதாவது யாராவது தமிழன் பெயர் கொண்டவன் பரிசு பெற்றால் தாமே பெற்றது போல் அகம் மகிழும் முட்டாள் மனிதர்கள் நாங்கள். இப்போது மட்டும் கருணாநிதி இவரை தமிழர் என்கிறாரே! என்றும் கேள்வி எழுப்புவோம் நாங்கள்!

எம் மொழி படித்து எம் மண்ணில் நாங்கள் எம் சிந்தனையோடு வாழ வழியற்று தேசிய மொழி படித்து நாய் வாழ்க்கை வாழும் வரையிலும் நாங்கள் உணர்வு பெறப் போவது இல்லை.

தாய்மடியில் தன் நிலை மறந்து வாழும் எங்கள் வாழ்வும் ஒரு வாழ்வா?
எங்களுக்குள்ளே பல பல பிரிவு!
பெயரில் அழித்த சாதியை நெஞ்சத்தில் எழுதி,
சாமிக்கும், அதன் பரிவாரங்களுக்கும் பயந்து
ஆசாமியை  நம்பி பரிகாரங்கள் செய்து
வாழும் மனித சமூகத்தின் பேர் தான் தமிழர்.

நாங்கள் கற்றவர்கள் வள்ளுவத்தையும்,பாரதியையும்
தேர்வுக்கு மட்டும்.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!

1 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

வாக்குகள் இட்டு இடுகையை பலரது பார்வைக்கு அமைத்த நண்பர்களுக்கு நன்றி.