விபசாரம் சரியா?

நாம் இந்த உலகில் நம்மை சுற்றி பலவகையான மக்கள் பலவேறுபட்ட அனுபவங்கள் பெற்று வாழ்கிறோம்.

நமது அனைவரின் அடிப்படை சிந்தனை எப்படி என் சந்ததி சந்தோசமாக எதிர்காலத்தில் வாழும் என்பது தான். ஆனால் இதற்கும் மேல் தான் எப்படி மகிழ்வோடு இருப்பது என்பது தான்.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் ஒரு கட்டத்தில் உடல் இச்சை ஒரு தேவையான மகிழ்வினை அளிக்கும் கருவியாக அமைகிறது.

என்னதான் இயற்கை உயிர் வளர்ச்சிக்காக இந்த இனபெருக்க செயபாட்டை உயிர்களுக்கு தந்திருந்தாலும் மனிதன் தனது மகிழ்வுக்கான ஒரு கருவியாக தான் வேண்டியபோது அடையும் வகையில் இந்த உடல் இச்சையை எண்ணுகிறான்.

ஆனால் நம்மில் எத்துணை பேர் நம் துணையை விட வேறு ஒருவரை எண்ணி நம் உடல் இச்சை பற்றி சிந்திக்கிறோம்?

இந்த காலத்தில் கல்வி தான் ஒரு மனிதனை சமூகத்தில்(அவனிடம் போதுமான பணம் இல்லாவிட்டால்) அங்கீகாரம் பெற்று வாழ செய்யும் கருவியாக உள்ளது.

ஆனால் இந்த கல்வி பெற மனிதன் தனது வாழ்வின் குறிப்பிட்ட இளமை காலத்தை வீணடிக்கிறான். இந்த காலங்களில் அவன் தான் கண்ணுருகிற எதிர் பாலினங்களை எல்லாம் மோகிக்கிறான்(மனதளவில்).

கனவு நாயகி என்று திரை நாயகிகளும் அழைக்கப்பட இதுவும் முக்கிய காரணமாகிறது.

மனதளவில் இன்றி சற்று திறன்? துணிவு? உள்ள சில மனிதர்கள் திருமணம் செய்யும் முன் இந்த அனுபவம் பெற விலை மகளிரை நாடுகின்றனர். ( விலை மகளிரின் தேவை?)

திருமணம் செய்த சிலர் ஒரு மாற்றத்திற்காக  விலை மகளிரை நாடுகின்றனர்.
நம் மனித இயல்பே இருப்பதை விட்டு இல்லாததை தேடுவது தானே?

திருவருட்செல்வர் படத்தில் சிவாஜி கணேசன் மன்னராக நடித்த முதல் காட்சியில் நாட்டியம் ஆடிய பத்மினியை அழைப்பார். உங்கள் மனைவியிடம் இல்லாதது என்னிடம் எது உள்ளது? என் பெண்மைக்கு ஒரு மன்னன் களங்கம் விளைக்கலாமா என்று பத்மினி கேட்பார்?

நீ ! பேரழகி! நாட்டிய ராணி! ஒருவகையான மென்மை உன்னிடம் உள்ளது. இவை எல்லாம் என் மனைவியிடம் இல்லை என்று சிவாஜி பதில் சொல்லுவார்.

சற்று பொறுங்கள் என்று கூறிய பத்மினி ஒரு தட்டு நிறைய பலவகையான இனிப்புகளை கொண்டு வந்து வைத்து இவற்றை உண்டு எது சிறப்பு மிகுந்தது என்று சொல்லுங்கள் என்று வினவுவார்?

எல்லாம் இனிப்புதான் என்று சாப்பிட்ட சிவாஜி சொன்னதும் பத்மினி பதில் சொல்லுவார். வடிவங்கள், சிறிது மாறுபட்டாலும் இனிப்பையே வழங்கும் இந்த இனிப்பை போல்
...... என்று கூறி முடிப்பார்.

மனிதன் தன் தேவைகளுக்காக மற்ற பெண்களின் பெண்மையை விலைபேசுவது ஒரு நாகரிகம் பெற்ற சமூகத்தின் கூறாக தெரியவில்லை. எந்த பெண்ணும் நாளும் வேறு, வேறு ஆணுடன் வெறும் பணம் மட்டும் கருதியே தன் உடல் வழங்க மாட்டாள்!

நடிகர் சிவகுமார் அவர்கள் தான் வாழ்ந்த தமிழ் திரை உலகில் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் நாடியதில்லை என்று உரக்க கூறுகிறார்! இது அல்லவோ வள்ளுவன் விரும்பிய பேராண்மை?

நேற்று என் நண்பர்களுடன் ஒரு விவாதம் "விபசாரம் சட்டமாக்குவது பெண்களுக்கு பாதுகாப்பா? இல்லையா?"

சட்டமாக்கினால் பெண்ணை விலை பேசும் கயவர்க்கு உரிமை வழங்கியது போலாகாதா?
சட்டம் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளன், காவலன், மற்றும் பெரும்பாலானவர் இந்த பெண்களை இம்சிப்பதை வெளியில் சொள்ளமுடியாமை ?

இப்படி இருவகையான சிந்தனை!

ஆனால் எந்த ஆணும் தன் குடும்பபெண் எந்த காரணம் கொண்டும் (அவன் எந்த நாடானாலும்) விபசாரம் செய்வதை விரும்புவதில்லை. எந்த தாயும் தன் மகள் விபசாரம் செய்வதை விரும்பவதில்லை.

காணும் பெண்களை தம் உறவாக நினைத்து அன்பு செய்தால் அவர்களை இச்சை பொருளாக காணும் உளபோக்கு நிச்சயம் மாறும் என்பதில் ஐயம் இல்லை,.

குறைந்த பட்சம் வறுமை காரணமாக தொழிலுக்கு வரும் பெண்களை பணம் கொடுத்து விலை பேசாமல் அவர்கள் வாழும் வழி காட்டுவோம்.

2 comments:

Unknown said...

http://velichathil.wordpress.com/2009/08/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4-%e0%ae%b5/

நீங்க சொன்ன நடிகர் இவர் தானா?

நாளும் நலமே விளையட்டும் said...

யாரோ எங்கயோ எதோ சொல்லறதுக்கு எல்லாம் நடிகர் பொறுப்பாக மாட்டார். ஒரு வேளை அவர் அப்படியே செஞ்சி இருந்தாலும் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது.

அவர் கூடி இருந்த கூட்டம் முன் பேசிய வாய் சொல்லுக்கு மதிப்பளிக்கிறேன். ( அது பொய்யா ? மெய்யா? என பார்க்க விரும்பவில்லை)